யாழ்.மானிப்பாயில் கடை ஒன்றுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! தப்பி ஓடும்போது துரத்தி சென்று வழிமறித்த இராணுவம் ஒரு ரவுடி கைது, மோட்டார் சைக்கிளும் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் கடையின் மீது தாக்குதல் நடத்தியதுடன் கடை உரிமையாளரையும் தக்கிவிட்டு தப்பி சென்ற நிலையில் வழிமறித்த படையினர் வாள்வெட்டு குழு ரவுடி ஒருவனை கைது செய்துள்ளனர். 

மேலும் வாள்வெட்டு குழு பயணித்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றும் சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக பொன்னாலை வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கழுத்தில் தாக்கியுள்ளது. அத்தோடு கடையிலிருந்த பொருள்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு தப்பிக்க முற்பட்டவேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் 

ரவுடிகளை துரத்தி சென்று வழிமறித்தபோதும் ஒருவரை மட்டும் இராணுவத்தினரால் பிடிக்க முடிந்தது. ஏனையோர் தப்பித்துள்ளனர். அத்துடன் ரவுடிகள் பயணித்த ஸ்கூட்டிப் பப் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு