யாழ்.கொடிகாமம் - வடமராட்சி வீதி திருத்த பணியில் ரோலர் வாகன சக்கரத்திற்குள் விழுந்து தொழிலாளி பலி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணிகளின்போது ரோலர் வாகனத்தின் சக்கரத்திற்குள் தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் உயிரிழந்தவர் பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி - கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.

அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு