யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்..! நாளை நடவடிக்கை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியமைக்காக முன் பாதுகாப்பு நடவடிக்கையாக யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நாளை முதல் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால் இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார் மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றுக்கு ள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில், மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்து வண்டிகளில் பயணம் செய்ததன் அடிப்படையில் 

இன்றைய தின தரவின்படி 772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேர்வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 

யாழ்.மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் நாளைய தினத்திலிருந்து அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது. யாழ் மாவட்டத்தில்சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் தரவுகள் கடந்த 1 ம் திகதி உரிய செயலணிக்கு அனுப்பப்பட்டு 

2ம் திகதி அதற்கான அனுமதி கிடைத்துள்ளது எனவே முதற்கட்டமாக யாழ் மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் கிராமசேவகர் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி 

வைக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு