பருத்துறையில் கடை உடைத்து சிகரட் பண்டல்கள், பீடி பண்டல்கள் உள்ளிட்ட 3 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை..! மேலும் பல கடைகளை உடைக்க முயற்சி..
யாழ்.பருத்துறை நகரில் கடை உடைத்து 3 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் கடையை திறந்து வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்க முற்பட்ட போதே கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த கடை உரிமையாளரால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடையின் பின் பக்கமாக பூட்டப்பட்ட கதவின் குறித்த பகுதியை உடைத்து அவ்வழியூடாக கையை விட்டு உள்பக்கமாக போடப்பட்டிருந்த தடுப்புச் சட்டகத்தை அகற்றியுள்ள திருடர்கள்,
கடையில் இருந்த பொருட்களை எடுத்து சுமார் பத்து அடி உயரமுள்ள சுவரேறி கொண்டுசென்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் பயண்படுத்திய கையுறை ஒன்றும் கடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இக்கொள்ளை முயற்சியில் கடையில் இருந்த உழுத்தம் பருப்பு மூடை இரண்டு, ஏழு மூடை மா, பீடி மற்றும் சிகரட் பண்டல்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றிருப்பதாகவும்,
குறித்த பொருட்களின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளதாக தொியவருகின்றது.
இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அருகில் இருந்த தொலைபேசி திருத்தம் மற்றும் விற்பனை நிலையத்தையும் உடைக்க முற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடையின் பின் பக்கமாக உள்ள கதவினையும் முன்னைய கடை பாணியில் உடைக்க முற்பட்டுள்ள போதிலும் முயற்சி கைகூடாத நிலையில் தப்பி சென்றுள்ளனர்.