யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்..! பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர்கள் உங்களை அடையாளப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்திலிருந்து பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனங்களில் மீன் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 

கூலர் வாகனங்களை கொண்டு சென்றவர்கள் மற்றும் பேலியகொட சந்தை வர்த்தகர்களுடன் வர்த்தக தொடர்புகளை பேணியளவர்கள் தம்மை அடையாளப்படுத்துமாறு

சுகாதார பிரிவு அவசர வேண்கோள் விடுத்திருக்கின்றது. யாழ்.பருத்துறை, தாழையடி, பாசையூர், கொழும்புத்துறை பகுதிகளில் இருந்து

கூலர் வாகனங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது. 

இந்நிலையில் தொடர்புடையவர்கள் உடனடியாக தங்களை அருகில் உள்ள சுகாதார பணிமனையில் அல்லது கிராமசேவகர்கள் ஊடாக தங்களை அடையாளப்படுத்துமாறு

கேட்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு