புங்குடுதீவு முடக்கம் நீக்கப்பட்டது..! கண்காணிப்பு தொடரும், யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்ப்பாணம் - புங்குடுதீவுக்கு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 5ம் திகதி அமுல்படுத்தப்பட்ட முடக்கம், இன்று அதிகாலை தளர்த்தப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்றுஏற்படவில்லை என சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தற்காலிக முடக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து புங்குடுதீவு பிரதேசம் வழமைக்குத் திரும்பும் . எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

எனவும் குறித்த பகுதியியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு