காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாத சிசு உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குடன் யாழ்.பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

இளவாலை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த தனீஸ்வரன் தம்பதிகளின் அக்ஷயன் என்ற 10 மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக இளவாலை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

நேற்று முன் தினம் குழந்தைக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைக்கு வீட்டில் பரசிடமோல் மாத்திரைகளை வழங்கியுள்ளனர். எனினும் காய்ச்சல் குணம் அடையவில்லை.

இதையடுத்து நேற்றுகாலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டிருந்தது. 

இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த வகையான காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது என்பது குறித்து கண்டறியப்படாத நிலையில் 

குறித்த குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டிருந்ததுடன், 

உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்திரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு