யாழ்.பல்கலைகழகம் உள்ளிட்ட 3 பல்கலைகழங்களில் உள்ள ஆய்வு கூடங்களை பீ.சி.ஆர் பரிசோதனைக்காக பயன்படுத்த தீர்மானம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழகம் உள்ளிட்ட 3 பல்கலைகழகங்களில் உள்ள ஆய்வுகூடங்களை பயன்படுத்தி பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், பேராதனை மற்றும் சிறி ஜயவர்த்தனபுர 

ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கைக்கு சம்மதித்ததாக பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டார். அதனடிப்படையில் மூன்று பல்கலைக்கழகங்களிலும் இன்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்படும்.

என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு