நிலமைகளை அவதானிக்கிறோம்..! மோசமானால் ஊரடங்கு அமுலாகும் அரசாங்கம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா பரவல் ஆபத்து நிலவும் நிலையில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தேவை ஏற்படின் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என இராணுவ தளபதியும் கொரோனா எதிர்ப்பு ஐனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் வெளியாகின்ற புள்ளிவிபரங்களை அதிகாரிகள் அவதானித்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாள நோயாளிகள் காணப்படும் பகுதிகளில் அவசியமென்றால் ஊரடங்கை பிறப்பிப்பதற்கு அரசாஙகம் தயார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகள் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் காணப்படும் நிலைமையை அவதானித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு