மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நகரில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து பெண்ணின் சங்கிலி அறுப்பு..!

ஆசிரியர் - Editor I

மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளையர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் மாலை குறித்த பெண் வர்த்தக நிலையத்திற்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், 

கடைக்குள் நுழைந்து 20 ரூபாய்க்கு பீடி தருமாறு கேட்டுள்ளார். வர்த்தக நிலைய உரிமையாளர் பீடியை கொடுத்த நிலையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 

4 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு