யாழ்.மாவட்ட மக்களின் கவனத்திற்கு..! நிர்ணய விலைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் தொியப்படுத்துங்கள் தொலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் உடனடியாக யாழ்.மாவட்ட செயலக முறைப்பாட்டு பிரிவுக்கு தொியப்படுத்துமாறு மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார். 

நாட்டில் கொரோனா அபாய நிலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது, இந்த நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால்

அது தொடர்பாக 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும். இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனவே அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் 

பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் அதிக விலையில் விற்க பட்டால் உடனடியாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு 

தொலைபேசி இலக்கமான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவலைத் தர முடியும். பொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.

எனவே பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு