அரசாங்க உத்தரவை மீறி இயங்கிவந்த இரு தனியார் கல்வி நிலையங்களுக்கு சீல்..! யாழ்.வடமராட்சியில் சுகாதார பிரிவு அதிரடி..

ஆசிரியர் - Editor I

யாழ்.வடமராட்சி கரணவாய், மற்றும் வதிரி பகுதிகளில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறி இயங்கிவந்த தனியார் கல்வி நிலையங்கள் இரண்டு இன்று சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. 

கொரோனா பரவல் அதிகரித்தலையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் தனியார் கல்வி நிலையங்களை மீள் அறிவித்தல் வரை அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவித்தலைக் கருத்தில் கொள்ளாது தொடர்ந்தும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பிலேயே இந்த கல்வி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி பிரதேச வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய நெல்லியடி சுகாதார பரிசோதகரால் இத் தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டிற்கும் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு