SuperTopAds

ஜெலி மீன்களை கட்டுப்படுத்தக் கோரி கடலன்னையிடம் முறையிட்ட முல்லைத்தீவு மீனவர்கள்!

ஆசிரியர் - Admin
ஜெலி மீன்களை கட்டுப்படுத்தக் கோரி கடலன்னையிடம் முறையிட்ட முல்லைத்தீவு மீனவர்கள்!

மீன­வர்­க­ளுக்­குத் தீங்கு விளை­விக்­கும் ஜெலி மீனை அகற்றி கடற்­றொ­ழில் மேற்­கொள்ள வழி­யேற்­ப­டுத்த வேண்­டும் என்று கோரி நேற்று கட­லன்­னை­யி­டம் முல்­லைத்­தீவு மீன­வர்­கள் வேண்­டி­னர் . அதற்­கா­கச் சிறப்பு வழி­பா­டு­க­ளை­யும் மேற்­கொண்­ட­னர். அளம்­பி­லில் உள்ள உப்­பு­மா­வெளி காளி கோயி­லி­லும், வேளாங்­கண்ணி ஆல­யத்­தி­லும் சிறப்பு வழி­பா­டு­கள் நடத்­தப்­பட்­டன.

அளம்­பில் பங்­குத் தந்தை கடல் அன்­னைக்கு சிறப்பு ஆசீர்­வ­திப்­பை­யும், கரை­யோர மக்­க­ளின் தொழி­லுக்கு வழி­வி­டக் கோரி­யும் சிறப்பு வழி­பாட்டை மேற்­கொண்­டார். அளம்­பில் கட­லில் ஜெலி மீன்­கள் அதி­க­ரிக்­கின்­றன. தொழில் செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. கரை­வ­லைத் தொழி­லில் ஈடு­ப­டும்­போது ஜெலி மீன்­களே அதி­கம் சிக்­கு­கின்­றன. அவை உட­லில் பட்­டால் கடியை ஏற்­ப­டுத்­தும். முன்­னர் ஒரு காலப்­ப­கு­தி­யில் மாத்­தி­ரமே அவை வரும். இப்­போது அதி­கம் வரத் தொடங்­கி­யுள்­ளன. அத­னால் மீன்­க­ளின் வரத்­துக் குறைந்­து­விட்­டது. ஜெலி மீன்­களை அகற்­றக்­கோ­ரியே கடல் அன்­னை­யி­டம் வழி­பாடு நடத்­தி­னோம் என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.