யாழ்.அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் தற்காலிக முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்திய நிலையில் சுகாதார பிரிவினால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகள் முடக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தின் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் 

அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 

அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப்பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் 

இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என அவர் மேலும கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு