கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் வந்த ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி..! “வீக் பொஸிட்டிவ்” பீதியடைய தேவையில்லை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்..

ஆசிரியர் - Editor I

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய யாழ்.கோண்டாவிலை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய நபருக்கு மீண்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த குறித்த நபருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, 

சிகிச்சையளிக்கப்பட்டது சிகிச்சையின் பின்னர் இம்மாதம் தொடக்கத்தில் அவர் யாழ்.கோண்டாவிலில் உள்ள அவருடைய வீட்டுக்கு திரும்பியிருக்கின்றார். அதன் பின்னர் அவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீளவும் அவருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டபோது, 

அவருக்கு “வீக் பொஸிட்டிவ்” அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதனால் ஆபத்தில்லை. கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று திரும்புவர்களுக்கு இவ்வாறான வீக் பொஸிட்டிவ் அடையாளம் காணப்படுகின்றது. அவ்வாறான தொற்றே கோண்டாவில் வாசிக்கும் உள்ளது.

என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு