கைது செய்யப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தல் சிறையில்..! பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை யாழ்.அனலைதீவு தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்..

ஆசிரியர் - Editor I

யாழ்.அனலைதீவில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஊர்காவற்றுறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை சமர்பித்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மஞ்சள் கடத்தலுடன் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் நபர்களுடன் தொடர்புகளை பேணியதற்றாக 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் அனலைதீவு தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கின்றது.

மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமிருந்தும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருப்பதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரையில் அனலைதீவு தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என சுகாதார அதிகாரிகள் தொிவித்திருக்கின்றனர். 

மேலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேருக்கும் உலர் உணவுப் பொருட்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு அனலைதீவு பகுதி ஊர்காவற்துறை பொலிஸார் மற்றும் கடற்படையினர், 

சுகாதார பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் அவசர கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்தி வருபவர்களின் தகவல் இருப்பின் பொதுமக்கள் 0212 222 6666 எனும் இலக்கத்திற்கு 

அறியத் தருமாறு குறிப்பிட்டுள்ளதோடு. மஞ்சள் கடத்தி வந்ததுடன் சம்பந்தப் பட்டவர்கள் அனலைதீவில் 3 பேர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனலைதீவின் பல பகுதிகளில் நடமாடியதாலும் இவ்வாறான வேறு சிலர் இருக்கலாம். 

என சந்தேகிக்கப்படுவதாலும் அனலைதீவிலிருந்து வெளியே வருவதும் உள்ளே செல்வதும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்களில் ஒருவர் தப்பி சென்று காரைநகரில் தங்கியிருந்த வீடும் அந்த வீட்டினை சார்ந்தாரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தீவகத்தில் கடல் மார்க்கமாக ஏற்படும் தொடர்புகளால் ஏற்படக் கூடிய கொரோனா நோய் பரம்பலைக்கட்டுபடுத்த அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு