திருடப்பட்ட 7 ஆடுகள் மீட்கப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது..! உரிமையாளர்கள் ஆதாரம் காட்டி பெற்றுக்கொள்ளலாம்..

ஆசிரியர் - Editor I
திருடப்பட்ட 7 ஆடுகள் மீட்கப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது..! உரிமையாளர்கள் ஆதாரம் காட்டி பெற்றுக்கொள்ளலாம்..

யாழ்.மானிப்பாய் மற்றும் நவாலி பகுதிகளில் திருடப்பட்ட 7 ஆடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரம் காட்டி பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

கடந்த இரு மாதங்களுக்கு முன் மேற்குறித்த பகுதிகளில் களவாடப்பட்ட ஆடுகளுடன் நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த ஆடுகளும் மீட்கப்பட்டன. இந்நிலையில் மீட்கப்பட்ட 7 ஆடுகள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்

யாழ்.பொலிஸ் நிலையத்தில் உள்ள நிலையில் அவற்றை ஆதாரம் காட்டி பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு