யாழ் இபோச பேருந்து நிலையத்தில் மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள்!

ஆசிரியர் - Admin
யாழ் இபோச பேருந்து நிலையத்தில் மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள்!

யாழ் இபோச பேருந்து நிலையத்தில்  இபோச ஊழியர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

குறிப்பாக யாழ் - கொழும்பு பேருந்துக்கள் தரித்து நிற்கும் பகுதிகளிலேயே இவ்வாறான இடையூறுகள் காணப்படுவதாகும் பொதுமக்கள் சிறுவர்கள் பெண்கள் போன்றோரை தமது பேருந்தில் ஏற்றும்போது கையில் சிகரட்டுடன் புகைப்பிடித்துக்கொண்டும் தகாத வார்த்தைகளை பிரயோகத்துக்கொண்டும் நிற்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன

இலங்கையில் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறெனில் யாழ் பேருந்து நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதுவும் இபோச ஊழியர்களே இவ்வாறு சட்டத்தை மீறுவதென்பது கவலைக்குரிய விடயமாகும் உடனடியாக இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா...

இங்கு பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் 04.03.2018 அதாவது இன்று 6மணியளவில் யாழ் இபோச பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்டவை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு