இலங்கையில் திரையரங்குகள், உணவகங்கள், இரவு விடுதிகளை மீண்டும் மூடுவதற்கு தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் திரையரங்குகள், உணவகங்கள், இரவு விடுதிகளை மீண்டும் மூடுவதற்கு தீர்மானம்..!

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நாட்டிலுள்ள திரையரங்குகள், இரவு விடுதிகள், உணவகங்கள், சூதாட்ட நிலையங்களை பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறியுள்ளார். நாட்டில் தொற்று பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு