மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பலர் கொழும்பில் பதுங்கியுள்ளனர்..! அடுத்த 7 நாட்கள் தீர்மானம் மிக்கவை, மக்களின் ஒத்துழைப்பை கேட்கிறது அரசு..

ஆசிரியர் - Editor I
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பலர் கொழும்பில் பதுங்கியுள்ளனர்..! அடுத்த 7 நாட்கள் தீர்மானம் மிக்கவை, மக்களின் ஒத்துழைப்பை கேட்கிறது அரசு..

இலங்கையில் பல பகுதியில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த 7 நாட்கள் தீர்மானம் மிக்கவை என இராணுவ தளபதியும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம் கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடந்த 4 நாள்களில் கோவிட் -19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மினுவங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருக்கின்றனர் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு 

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு