யாழ்.புங்குடுதீவில் 384 பேர் இன்று தனிமப்படுத்தப்பட்டனர்..! பிறந்தநாளில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு 30ம் திகதி வந்த பெண்ணுடன் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 384 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளானார். இதேவேளை மற்றய பெண் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ள பெண் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவருடன் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 384 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு