மக்கள் அவதானமாக நடந்து கொள்வது சிறந்தது..! நீங்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படலாம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

குறிப்பாக முககவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. எனினும் பொதுவாக பல இடங்களில் முக கவசம் இல்லாமல் மக்கள் நடமாடுவது அவதானிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறுவோர் தனிமைப்படுத்தப்படுவார்கள். என பொலிஸாாரும், இராணுவத்தினரும் பொதுமக்களுக்கு எச்சரித்து வருகின்றனர். 

நேற்று மாலை யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் முக கவசம் அணியாது சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தோர் பொலிஸாரால் கண்டுமையாக கண்டிக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறான நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு