இரவு தூங்கும் முன் படுக்கையறையில் வெங்காயத்தை வெட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!..

ஆசிரியர் - Admin
இரவு தூங்கும் முன் படுக்கையறையில் வெங்காயத்தை வெட்டி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!..

வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்தால் பல நோய்களும் கூட குணமாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். 1919ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

அப்போது பரவிய ஒரு காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். மருத்துவ உலகமே குழம்பிய நிலையில், ஒரு ஏழை விவசாயின் குடும்பத்தை மட்டும் இந்த காய்ச்சல் தீண்டவில்லை.

இது மருத்துவர்களுக்கு வியப்பைத் தர, அந்த ஏழை விவசாயியின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகள் இருந்தது. 

இதைப் பற்றிக் கேட்டபோது அந்த விவசாயி, நாங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இப்படி வெங்காயத்தை இரவில் வெட்டி வைத்து விட்டு, காலையில் தூக்கி எறிந்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் அந்த வெங்காயத் துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அதில் ஏராளமான பாக்டீரீயாக்கள் இருந்தன. அந்த அறையில் இருந்த அனைத்து கெட்ட பாக்டீரீயாக்கள், வைரஸை அது ஈர்த்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல் தூங்கும் முன் பெரிய வெங்காயத்தை இரண்டு துண்டாக வெட்டி தலைமாட்டில் வைத்து உறங்கினால் அந்த அறையில் இருக்கும் பாக்டீரீயா, வைரஸை உறிஞ்சிவிடும். இதை மட்டும் செய்து பாருங்க. அப்புறம் நோய்கிருமிகள் உங்களை அண்டவே அண்டாது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு