ரவுடி தேவாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்..! ஆவா வினோதனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அடுத்த 10 நிமிடங்களில் உடுவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் இந்தியாவுக்கு தப்பி சென்றிருந்த ஆவா குழு ரவுடி தேவா என்பவனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு ரவுடி குழு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

இன்று மாலை 2.30 மணியளவில் இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு அடுத்த 10 நிமிடங்களின் பின்னர் உடுவில் மல்வம் பகுதியில் உள்ள தேவா என்பனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

யாழ்.மானிப்பாயில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் ஆவா குழுவின் ரௌடி தேவா நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் இருப்பதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு