யாழ்.பருத்துறை மக்களுக்கான அறிவித்தல்..! அநாவசியமான நடமாட்டத்தை தவிருங்கள்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவு பெண் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரையில் பயணித்த யாழ்.பருத்துறை சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தில் பயணம் செய்த 50 பேர் வரை அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பேருந்தில் பயணித்தவர்கள், 

 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமணைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் 

வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகள் தவிர்ந்த தேவையற்ற விதத்தில் நடமாடுவதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்க்குமாறு சுகாதார மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். கோரோனா பாதித்த புங்குடுதீவுப் பெண் கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து, 

புத்தளம் பகுதியில் பழுதடைந்துள்ளது. அதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 புத்தளம் பகுதியிலிருந்து அந்தப் பெண் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்துள்ளார். அவர் கொடிகாமத்தில் அதிகாலை 4.30 இறங்கிவிடப்பட்டுள்ளர்.

அந்தப் பேருந்து அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறையை வந்தடைந்துள்ளது. அதில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர்.எனவே கொழும்பு - பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு 

சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.எனவே அந்த பேருந்தில் பயணித்தோர் உடன் தன்னார்வமாக உங்களை வெளிப்டுத்தி வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு