யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 போிடம் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I

ஹம்பகா மாவட்டத்திலிருந்து கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணம் வந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 போிடம் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. 

யாழ்.நல்லுார் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் முயற்சியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

ஹம்பகா மாவட்டத்தில் சமூக தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அந்த பகுதியிலிருந்து தொழில் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகிறவர்கள் 

தற்காலிக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள் என இன்று மாலை மாகாண சுகாதார பணிப்பாளர் கூறியிருந்தார். 

இந்நிலையில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 9 போிமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. 

இதன் பெறுவேறுகள் செவ்வாய் கிழமை வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு