கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவை சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணித்தவர்களை அடையாளம் காண நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட யாழ்.புங்குடுதீவை சேர்ந்த பெண் ஹம்பகாவிலிருந்து பேருந்தில் பயணம் செய்து யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஹம்பகா மாவட்டத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் திரும்பிய பெண் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த பெண் பயணித்த பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு அதில் பயணித்தவர்களையும் அடையாளம் கண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த பெண் கொழும்பு பெற்றாவில் இருந்து Ran Silu என்ற WP ND 6500 இலக்க பேருந்தில் பயணித்து 4ம் திகதி அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் வந்துள்ளார். பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து Matha என்ற NP ND 8790 இலக்க பேருந்தில் பயணித்து காலை 7 மணிக்கு புங்குடுதீவில் இறங்கியுள்ளார். 

இந்நிலையில் குறித்த பேருந்துகளில் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் 021 222 6666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தங்களை அடையாளப்படுத்துமாறு பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு