கொக்குவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

ஆசிரியர் - Admin
கொக்குவிலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

கொக்குவில் - பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு