யாழ்.மாநகரசபை சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..! ஹம்பகாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணும், அவருடைய நண்பரும் தனிமைப்படுத்தப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நாவலர் வீதியில் உள்ள தொல்பொருள் திணைக்கள அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரின் தாயார் ஹம்பகாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்த குறித்த பெண்ணும் அவருடைய நண்பரும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேற்படி பெண்ணின் தாயார் கொரோனா தொற்று பரவிய ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் ஹம்பகாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் தனது நண்பருடன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வந்துள்ளார். குறித்த விடயம் யாழ்.மாநகரசபையின் சுகாதார பிரிவுக்கு தொியவந்த நிலையில், 

குறித்த பெண் தங்கியுள்ள இடத்திலும், அவருடைய நண்பர் பணிபுரியும் யாழ்.கோட்டையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் பீதியடையாமல் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு