யாழ்.நகரில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக்கும் பொலிஸார்..! நடவடிக்கையில் உடன் இறங்கினர், உதாசீனம் செய்வோர் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக்கும் பொலிஸார்..! நடவடிக்கையில் உடன் இறங்கினர், உதாசீனம் செய்வோர் அவதானம்..

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அறியப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாாருக்கு பணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்று மாலையே பொலிஸார் தமது கடமைகளை ஆரம்பித்திருக்கின்றனர். பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் 

சமூக இடைவெளியை பேணுதல், முக கவசம் அணிதலை கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக

நகர் சுற்றுக் காவல் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதுடன், பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் என கேட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு