யாழ்.பருத்துறையில் கூரிய ஆயுதங்கள், கொட்டன்களுடன் வன்முறை குழுக்கள் அட்டகாசம்..! விலக்குபிடிக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் கூரிய ஆயுதங்கள், கொட்டன்களுடன் வன்முறை குழுக்கள் அட்டகாசம்..! விலக்குபிடிக்க சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல்..

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்றிருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவம் யாழ்.பருத்துறை நகரில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

பருத்துறை - புனிதநகர் பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டிருக்கின்றது. இதனையடுத்து கூரிய ஆயுதங்கள், கொட்டன்களுடன் இரு குழுக்களும் 

பருத்துறை நகர்வரை சென்றிருக்கின்றது. இதன்போது வாக்குவாதம் புரிந்ததாக குற்றச்சாட்டில் சிவில் உடையில் நின்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸாரும் பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு