வனஜீவராசிகள் திணைக்களம் அடாவடி..! சொந்த காணியில் விவசாயம் செய்த 14 விவசாயிகள் கைது, அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், விவசாயிகள்..

ஆசிரியர் - Editor I
வனஜீவராசிகள் திணைக்களம் அடாவடி..! சொந்த காணியில் விவசாயம் செய்த 14 விவசாயிகள் கைது, அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், விவசாயிகள்..

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் தமது சொந்த காணிகளில் வயல் விதைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த 14 விவசாயிகள் வனவள ஜீவராசிகள் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த விவசாயிகளிடம் காணிகளை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் உள்ளபோதும் தமது ஆழுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தை முற்றுகையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் விவசாயிகள் இணைந்து தமது எதிர்ப்பை காண்பித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு