திருக்கோஸ்வரர் ஆலயத்திற்கு சென்றவர் கற்பாறையில் விழுந்து உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றிருந்தவர் கற்பாறையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் வருகை தந்த நிலையில் 

கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது. இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் 

வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தலைமை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு