வெகுசன ஊடக அமைச்சு, அரச தகவல் திணைக்களம் இணைந்து யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு..! சான்றிதழும் வழங்கிவைப்பு..

ஆசிரியர் - Editor I
வெகுசன ஊடக அமைச்சு, அரச தகவல் திணைக்களம் இணைந்து யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு..! சான்றிதழும் வழங்கிவைப்பு..

வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேஸன் தலமையில் இடம்பெற்றிருக்கின்றது. 

தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியினை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது பல்கலைக்கழகம் ஊடக கற்கைகள் விரிவுரையாளர்களால் விரிவுரைகள் இடம்பெற்று, 

நிறைவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதல்களும் வழங்கப்பட்டிருந்தது.நிகழ்வின் பிரதம விருதினராக வெகுசன ஊடக அமைச்சர்‌ கெஹெலிய ரம்புக்வெல்ல, தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக, தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், 

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணை தலைவருமான அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் யோகராஜன், வெகுஜன ஊடக அமைசின் செயலாளர், 

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு