சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்புபோராட்டம்

ஆசிரியர் - Admin
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்புபோராட்டம்

சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் களவாடப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  ஞாயிற்றுக்கிழமை (4) காலை 9.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

இதன் போது   ஆதீன முதல்வர்கள் துறவிகள் முன்னிலை வகிக்க சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள்இ தர்மகத்தா சபைகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இப் போராட்டத்தின் முடிவில் வடமாகாண முதலமைச்சருக்கு மகஜர் கையளிக்கப்படும்.

மேலும்இ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாக இந்து கலாசார அமைச்சருக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு