ஹர்த்தாலுக்கு எதிராக வடகிழக்கில் ஆங்காங்கே விஷமிகள் போராட்டம்..! நேற்று வடக்கில், இன்று கிழக்கில்..

ஆசிரியர் - Editor I
ஹர்த்தாலுக்கு எதிராக வடகிழக்கில் ஆங்காங்கே விஷமிகள் போராட்டம்..! நேற்று வடக்கில், இன்று கிழக்கில்..

தமிழ்தேசிய கட்சிகளின் அழைப்பில் வடகிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில், கிழக்கில் வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள சில விஷமிகளால் ஹர்த்தாலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது வாழ விடு வாழ விடு  நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா? போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்புவிடுத்த பத்து தமிழ் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.எனவே, தாங்கள் அன்றாட தொழில் செய்து வரும் நிலையில், இவ்வாறு ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கூறி 

எங்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.குறித்த ஹர்த்தால் எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கமும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான போராட்டம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு