நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..! மீறினால் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..! மீறினால் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் அதனை உடனடியாக நிராகரிக்குமாறு நாட்டிலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் 

பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும்கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்போது 

அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான 

நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு