நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதி பத்திரம் (வாகன பேமிற்)..! புதியவர்களுக்கு முதலில்..

ஆசிரியர் - Editor I

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 79 பேருக்கு தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பத்திரங்கள் மிக விரைவில் வழங்கப்படவுள்ளது. பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னர் வழங்கப்படவுள்ளது. 

வழங்கப்படும் தீர்வையற்ற இறக்குமதி அனுமதியின் 65 லட்சம் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியும். நாட்டில் தற்போது வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 

அனுமதிப்பத்திரம் பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாட்டில் கிடைக்கும் வாகனங்களை வாங்கலாம் அல்லது இறக்குமதி தடை நீக்கப்படும்போது அல்லது எதிர்காலத்தில் 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை வாங்கலாம் என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.அதே நேரத்தில், பொது சேவையிலுள்ள அதிகாரிகளுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி 

அனுமதிப் பெறத் தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.அரசு அதிகாரிகள் அந்த அனுமதியின் கீழ் 36 லட்சம் ரூபாய் இறக்குமதித் தீர்வைப் பெற்று வாகனத்தை இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு