பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” பப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..!

ஆசிரியர் - Editor I
பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” பப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. 

இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், 

ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. 

சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இந் நிலையில், படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமையினால், 

பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி 

லங்கை செல்ல உள்ளதாகவும், அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு