தற்செயலாக கண்டெடுத்த பணத்தை பேஸ்புக் ஊடாக உரியவரிடம் ஒப்படைத்த பாடசாலை உப அதிபர்..! யாழ்.சங்கானையில் சம்பவம், பலரும் பாராட்டு..
வங்கிக்கு முன்பாக தவறவிடப்பட்ட ஒரு தொகை பணத்தை மீட்ட பாடசாலை உப அதிபர் ஒருவர் உரியவரிடம் அந்த பணத்தை ஒப்படைத்திருக்கின்றார்.
சங்கானை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்று இயந்திரத்தில் ஒரு தொகை பணத்தை எடுத்த தாதிய உத்தியோகஸ்த்தர் ஒருவர் அதனை தவறவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வங்கி கிளைக்கு சென்றிருந்த சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய உப அதிபர் பேஸ்புக் ஊடாக உரிமையாளரை கண்டுபிடித்து,
உரிய தாதிய உத்தியோகஸ்த்தரிடம் பத்திரமாக சேர்த்துள்ளார். உப அதிபரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றனர்.