தன்னுடைய வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மிக இழிவான முறையில் கிராபிக்ஸ் செய்து காதலிக்குமாறு அச்சுறுத்தல்..! முள்ளியவளையில் மாணவன் கைது..

ஆசிரியர் - Editor I
தன்னுடைய வகுப்பு மாணவியின் புகைப்படத்தை மிக இழிவான முறையில் கிராபிக்ஸ் செய்து காதலிக்குமாறு அச்சுறுத்தல்..! முள்ளியவளையில் மாணவன் கைது..

தன்னுடன் கல்வி கற்ற மாணவியின் புகைப்படத்தை கிராப்பிகஸ் செய்து பேஸ்புக், வட்ஸ்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பி காதலிக்குமாறு மிரட்டிய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனே கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மாணவியின் புகைப்படத்தை கிராப்பிகஸ் செய்து வேறு படங்களுடன் பொருத்துவது, அவற்றை பேஸ்புக், வட்ஸ்ஸப் போன்றவற்றில் பரப்பி அச்சுறுத்தியிருக்கின்றார். 

இந்நிலையில் மாணவி தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்தியதுடன், அவருக்கு திருமணமும் நடந்துள்ளது. இதன்பின்னரும் குறித்த மாணவன் தனது நடவடிக்கையை நிறுத்தவில்லை. 

மிக இழிவானமுறையில் புகைப்படங்களை கிராபிக்ஸ் செய்து தன்னோடு வருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. 

இதனடிப்படையில் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு