அச்சுவேலி பகுதியில் குடும்பஸ்தருக்கு கத்தி வெட்டு! - வெட்டியவர் கைது

ஆசிரியர் - Admin
அச்சுவேலி பகுதியில் குடும்பஸ்தருக்கு கத்தி வெட்டு! - வெட்டியவர் கைது

குடும்பஸ்தரை வெட்டிய சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ரீ.கருணாகரன் இன்று உத்தரவிட்டார். 

நேற்றுமாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதிகளை மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நபர் கத்தியால் குடும்பஸ்தரின் முதுகில் வெட்டியுள்ளார். 

இச் சம்பவத்தில் காயமடைந்த நபர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார் நீர்வேலி மத்தி பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய நபரை கைது செய்திருந்தனர். சந்தேக நபரை இன்று (28) மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு