1 லட்சம் வேலைவாய்ப்பு வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் காரணமாம்..! அரசியல் இடைச்செருகல் நீக்கப்பட்டு பொருத்தமானவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு..

ஆசிரியர் - Editor I

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிறுத்தப்பட்டமைக்கு காரணம், பயனாளிகள் தொிவில் உள்ள அதீதமான அரசியல் தலையீடே என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு பிரதானமான காரணம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஆக குறைந்த கல்வி தகமையுடையவர்களுக்கு அரசவேலை வாய்ப்பினை வழங்குவதன் ஊடாக அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும். 

இந்த நோக்கத்திற்கு ஏற்ப பயனாளிகள் தொிவு செய்யப்பட்டு இராணுவம் மூலம் மீளாய்வு செய்யப்பட்டு இராணுவம் தமது பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றது. அதற்கமைய வடகிழக்கு மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் பலர் ஜனாதிபதி எதிர்பார்த்த தகமைகளை கொண்டிராததுடன், 

அதீத அரசியல் செல்வாக்கினால் உள்செருகப்பட்டவர்களாகவும், சமூர்த்தி பயனாளிகள் அல்லாத, சொந்த வீடு வைத்திருப்பவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த நியமனம் வடகிழக்கு மாகாணங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் அரசியல் தலையீடுகள் மூலம் உள்ளீர்க்கப்பட்டவர்களை நீக்கி நியாயமாக தொழில் கிடைக்கவேண்டியவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும், வடகிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படவில்லை. எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு