சுழற்சிமுறை மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும்..? மின் சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சுழற்சிமுறை மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும்..? மின் சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..

இலங்கை ஏற்பட்டி திடீர் மின் தடையை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருக்கும் சுழற்சி முறையிலான மின்வெட்டு இந்த வாரம் இறுதிக்குள் நிறுத்தப்படும். என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

மின் தடையால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளும் தடைப்பட்டதாக இலங்கை மின்வலு அமைச்சின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டை குறுகிய காலத்திற்குள் வழமைக்கு கொண்டு வருவது கடினம் என கூறினார். ஆனாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையாகும்போது 

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார். 

மின் வழங்கல் போதுமாக இருந்தமையால் நேற்று சில பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு