ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு சந்திரகுமார் சவாலா..? அவர் ஒரு பொருட்டே இல்லை. ஈ.பி.டி.பி வெற்றிபாதையில் பயணிக்கும்..

ஆசிரியர் - Editor I
ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு சந்திரகுமார் சவாலா..? அவர் ஒரு பொருட்டே இல்லை. ஈ.பி.டி.பி வெற்றிபாதையில் பயணிக்கும்..

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய முருகேசு சந்திரகுமார் எமது கட்சிக்கு சவாலானவர் அல்ல எனவும் அவரது வெளியேற்றத்தின்பின்னர் வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்து 

முன்னோக்கி செல்வதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி நிர்வாக செயலாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் 10/8/2020 திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னை ஒரு தேசியவாதியாக காட்ட முயலும் சந்திரகுமாரின் அரசியல் நடவடிக்கை எமது கட்சியின் தேர்தல்கால செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணாது 

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் பேசும் காட்சியிலிருந்து பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையிலும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையிலும் 

பலர் தமது விருப்பு வாக்குகளை அரைவாசியாகவும் இழந்துள்ளனர்ஆனால் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்த நிலையில் மக்கள் எமது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையின் பயனாக 

வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி ஓர் ஆசனத்தை பெற்று காலூன்றி உள்ளதுஅபிவிருத்தி அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே பயணிக்கும்போது 

எமது கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை மக்கள் இம்முறை தேர்தலில் பலப்படுத்தி காட்டியுள்ளனர்தமிழ் தேசியத்தில் பலரை உருவாக்கிய பருத்தித்துறை இன்று போலித் தமிழ் தேசியவாதிகளால் 

தென்னிலங்கை கட்சிகளின் வசம் சென்றுள்ளதுநல்லாட்சி அரசாங்கத்தில் வாக்களித்த மக்களை திருப்திபடுத்தாமல் விட்டதன் விளைவே இன்று மக்கள் அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வை கொண்டுள்ள காட்சிகள் பக்கம் மக்கள் அணிதிரள 

ஆரம்பித்து விட்டனர் ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட ராஜபக்சக்களின் விருப்பத்திற்குரிய 

டக்ளஸ் தேவானந்தாவால் மட்டுமே தமிழ் மக்கள் பயணிக்க இருக்கும் பாதையை வளமாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு