வலுக்கிறது தேசியபட்டியல் இழுபறி..! மாவைக்கே தேசியபட்டியல் தமிழரசு கட்சி விடாப்பிடி..

ஆசிரியர் - Editor I
வலுக்கிறது தேசியபட்டியல் இழுபறி..! மாவைக்கே தேசியபட்டியல் தமிழரசு கட்சி விடாப்பிடி..

தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கான தேசியபட்டியல் ஆசனம் மாவை சேனாதிராசாவுக்கு வழங்கவேண்டும், என இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட கிளை தீர்மானித்துள்ளதுடன், கலையரசனுக்கு வழங்கப்பட்ட நியமனம் மீள் பரிசீலிக்கப்படவேண்ம் எனவும் கேட்டுள்ளனர். 

இது குறித்து தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவரும், மாகாணசபை அவை தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.  இன்று பகல் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் தீடீரென மாவட்ட கிளை கூட்டம் கூடியது. 

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டும். அதை பங்காளிக் கட்சிகளுடனும் பேசி முடிவு செய்ய வேண்டும். 

ஒருவேளை தேசியப்பட்டியல் தொடர்பாக வேறு ஏதாவது முடிவு செய்திருந்தால் அந்த முடிவை மீள்பரிசீலனை செய்யவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் இரா.சம்பந்தனிற்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்த் தாக்கம் செலுத்தப்பட்டலாம் என்பதால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு