ஆவா குழு சன்னாவின் கூட்டாளி சிக்கினார்!

ஆசிரியர் - Admin
ஆவா குழு சன்னாவின் கூட்டாளி சிக்கினார்!

ஆவா குழுவின் தலைவர் என சொல்லப்படும் சன்னாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்ததாக பொலிஸார் கூறினார். .

 இவர் சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் அன்னார் தொடர்புடையவர் எனவும் குறிப்பிட்டனர்.

   

குறித்த சந்தேக நபர் குறித்து இரகசிய தகவல் ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதற்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகளின் பின்னர் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் சன்னா சிறையிலிருந்து தப்பிச் சென்று மீண்டும் பிடிபட்டதை அடுத்து. ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு