இந்திய துணைத் தூதுவருக்கு யாழ்ப்பாணத்தில் பிரியாவிடை!
இலங்கைக்கான இந்திய துணை தூதுவருக்கான பிரியாவிடை நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வடக்கு மாகாண முதலமைச்சரினால் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.