குப்பிளானில் உருளைக்கிழங்கு அறுவடை விழா.

ஆசிரியர் - Editor I
குப்பிளானில் உருளைக்கிழங்கு அறுவடை விழா.

யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் மற்றும் கூட்டுறவு சாமசத்தினால் குப்பிளானில் உருளைக்கிழங்கு அறுவடை விழா இன்றுகாலை இடம்பெற்றது.


இந்த அறுவடை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் தந்தையும் பிரத்தியேக செயலாளருமான சதாசிவம் இராமநாதன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உருளைக்கிழங்கு அறுவடையை ஆரம்பித்து வைத்தார் .


மேலும் இந்த நிகழ்வில் கூட்டுறவு சாமச தலைவர் இ.தெய்வேந்திரம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் ,வட மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார்,கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் இ.நிசாந்தன் உடுவில் பிரதேச செயலாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார் விவசாயப் பெருமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு