வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பிரதேசத்தில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சிப் பிரதேசத்தில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவை எல்லைக்குட்பட்ட  கிளிநொச்சிப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (25) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை -08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்ப்பாணத்தின் பூதர்மடம், கோப்பாய்ச் சந்தி, மானிப்பாய் வீதி, கைதடி வடக்கு, இருபாலைச் சந்தி, இருபாலை பழைய வீதி, வட்டக்குளம், கட்டைப்பிராய், கல்வியங்காடு, இலங்கைநாயகி வீதி, கல்வியங்காட்டுச் சந்தி, ஆடியபாதம் வீதி, நாயன்மார்கட்டு, இராமலிங்கம் வீதி, முடமாவடி, கிளிகடைச் சந்தி, GPS றோட், கோப்பாய்ப் பொலிஸ் நிலையம், திருநெல்வேலி பாற்பண்ணை, திருநெல்வேலிச் சந்நி, கலாசாலை வீதி, பலாலி வீதியின் ஒருபகுதி, தாவடிச் சந்தி, தாவடி மானிப்பாய் வீதி, தாவடி பாடசாலை வீதி, வன்னியசிங்கம் வீதி ஆகிய பகுதிகளிலும்,

நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை  முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்ளடக்கிய இலங்கை மின்சார சபையின் சேவை எல்லைக்குட்பட்ட கிளிநொச்சிப் பிரதேசத்தில் கெளதாரிமுனைப் பிரதேசம், அறிவியல் நகர், வற்றாப்பளை, முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை, மாஞ்சோலை வைத்தியசாலை, முல்லைத்தீவு விமானப்படை-1 மற்றும்-11, முல்லைத்தீவு 59 ஆவது படைப்பிரிவு(14 ESR-01 மற்றும் 14ESR-02), SFHQ வற்றாப்பளை, குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை, 12 VIR இராணுவ முகாம், 16 ESR இராணுவ முகாம், MAS Active, யுனிச்செலா, பொறியியல் பீடம், விவசாய பீடம், Farm House, North Cargill's Agri Foods ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு